Friday, 17th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வீடு வீடாக சென்று ஆக்சிசன் அளவு கணக்கிடும் பணி

மே 25, 2021 05:53

கோவை. மே. 26:  கோவை மாநகரில் வீடு வீடாக சென்று ஆக்சிசன் அளவு கணக்கிடும் பணி துவங்கியுள்ளது. இப்பணியில்  1,500 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 

கோவை மாவட்டத்தில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் கோவை மாநகராட்சி பகுதியில் வசிக்கின்றனர். இதையடுத்து மாநகராட்சி பகுதியில் தொற்றை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இதன் ஒரு பகுதியாக சளி காய்ச்சல் கண்டறியும் பணிவுடன் பொதுமக்களின் உடலில் ஆக்சிஜன் அளவு கண்டறியும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு 1.500 பேர் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறியதாவது:-

 இரண்டாவது அலையில் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. உடலில் ஆக்சிஜன் அளவு குறைவதால் ஆக்சிசன் படுக்கை வசதியுடன் கூடிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களின் உடலில் ஆக்சிஜன் அளவு எவ்வளவு உள்ளது என்பதை கணக்கிடும் பணிகாக 1,500 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இரண்டு பேருக்கு ஒரு ஆக்சி மீட்டர் வீதம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த பணியாளர்கள் பொதுமக்களின் விரலில் ஆக்சி மீட்டர் பொருத்தி ஆக்சிஜன் அளவை கணக்கீடுவர். ஆக்சிஜன் அளவு 95 கீழ் இருந்தால் அவர் உடனடியாக அருகில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் இவ்வாறு அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்